Thursday, April 10, 2014

அனைவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் !!


கோத்ராவில் நடந்த ரயில் எறிப்பும் அதனை தொடர்ந்து மூன்று தினங்கள் மொத்த குஜராத் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு ஒரு விடுப்பு எடுத்துச் சென்றதும், அதன் விளைவாக என்ன நடந்தது என்பதை பார்த்து உலகமே தலைகுனிந்து பார்த்தது.

கோத்ரா ரயில் எறிப்பு இஸ்லாமியர்கள் செய்த தவறு என்றும், அந்த தவறுக்கு பதிலாகவே அதன் அடுத்து நிகழ்ந்த 2000 இஸ்லாமியர்களின் படுகொலையையும் ஞாயப்படுத்த முயன்றது சமூகம்.

இந்த குஜராத் இனப்படுகொலையில் என்ன நிகழ்ந்தது என்பதை அறிய விருப்பம் இருப்பவர்களுக்கு இந்த நூல் மிகவும் பயணுள்ளதாக அமையும். இந்த புத்தகம் மொத்த குஜராத் இனப்படுகொலையின் மறுபக்கத்தை காட்டுகிறது.

இந்தியாவின் மிக முக்கியமான பத்திரிக்கையாளரான ஆஷிஷ் கேத்தன், குஜராத்தில் தங்கியிருந்து தன் உயிரையும் பனயம் வைத்து செய்த ஆய்வு தான் அடுத்து வரும் பக்கங்களில் பதிவு செய்துள்ளார். கோத்ரா ரயில் எறிப்பு என்பது ரயிலுக்கு வெளியே இருந்து கொளுத்தியது அல்ல மாறாக ரயிலுக்கு உள்ளே இருந்து தான் நடந்தது என்பதையும் அவர் உயிரோடு இருந்த ரயில் பயணிகளின் பேட்டிகள் மற்றும் சாட்சியஙக்ளின் அடிப்படையில் நிறுவியிருக்கிறார்.

கோத்ரா இனப்படுகொலையில் முக்கிய பங்காற்றியவர்கள் அனைவரையும் சந்தித்து அவர்களின் பெருமிதமான அனுபவஙக்ளை காமிராவில் பதிவு செய்தார் ஆஷிஷ் கேத்தன். அவர்கள் தங்களின் சொந்த வார்த்தைகளின் அந்த மூன்று நாட்கள் நடந்த நிகழ்வுகளை மிக துல்லியமாக விவரிக்கிறார்கள். எப்படி இந்த இனப்படுகொலை திட்டமிடப்பட்டது, தலைவர்கள் எப்படி வழிநடத்தினார்கள், காவல்துறை எப்படி வேடிக்கை பார்த்தது, அரசு இயந்திரம் எப்படி வேண்டியதை செய்து கொடுத்தது, நீதிபதிகள் எப்படி உதவினார்கள், குழந்தைகள் – பெண்களை எப்படி எல்லாம் சித்திரவதை செய்தார்கள், எப்படி காங்கிரஸ் எம்.பி யை துண்டு துண்டாக வெட்டினார்கள் என்பதாக நம் ரத்தத்தை உறைய வைக்கும் சம்பவங்கள் இந்த புத்தகத்தின் பக்கங்களில் விவரிக்கப்படுகிறது.

மோடி முதல்வராக இருந்திருக்கா விட்டால் அவர் வெடிகுண்டையும் வீசியிருப்பார் என்று ஹிந்துத்துவ வெறியர்கள் உண்மையை விளக்கமாக சொல்கிறார்கள். ராக்கெட் செலுத்தும் கருவிகளை எப்படி தயாரித்தார்கள் என்று ஒருவர் விளக்குகிறார்.

இனி வரும் பக்கங்களில் இருப்பவற்றை நீங்களே வாசித்து அறிந்து கொள்க. நரேந்திர மோடி இந்த இனப்படுகொலையை எப்படி திட்ட்மிட்டு செய்தார் என்பதையும் எப்படி இந்த இனப்படுகொலையை செயல்படுத்தியவரகளை அவர் அமைச்சராக்கி அழகு பார்த்தார் என்பதை நாம் அறிவோம். வாசியுங்கள், பகிருங்கள் இந்த உண்மையை உங்கள் நண்பர்களிடம், உறவினர்களிடம், தோழர்களிடம்.

இந்த தேர்தல் காலத்தில் இந்த புத்தகம் ஒரு விவாதத்தை உருவாக்க உதவியாக இருக்கும் என்று பல நண்பர்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அதன் அடிப்படையில் தான் இந்த புத்தகம் அச்சுக்கு அனுப்பபட்டுள்ளது. இந்த நூலை ஒரு அரசியல் பணியாக மக்களிடம் கொண்டு செல்ல் வேண்டும், அதற்கு உங்கள் அனைவரின் உதவியையும் நாடுகிறேன்.

மலிவு விலையில் கொண்டு வர நன்கொடைகள் வரவேற்கப்படுகின்றன, மொத்தமாக முன்பணம் கொடுத்து புத்தகத்தை நீங்கள் பெறலாம், புத்தகத்தை ஏலத்தில் எடுத்து இந்த முயற்சியை வரவேற்கலாம், இதில் பெறப்படும் மொத்த தொகையும் மேலும் மலிவு பதிப்புகள் அச்சடித்து மக்களிடம் கொண்டு செல்லவே பயன்பத்த்தப்படும். வாருங்கள் தோள் தாருங்கள். மேலும் விபரங்களுக்கு முகநூல் INBOX அல்லது muthusmail@gmail.com

BANK ACCOUNT DETAILS :
A.MUTHUKRISHNAN
State Bank of INDIA
SB ac non – 30322814376
Madurai Kamaraj University Branch
IIFSC SBIN0002235

நன்றி
முத்து கிரிஷ்ணன்

No comments:

Post a Comment