Showing posts with label news. Show all posts
Showing posts with label news. Show all posts

Friday, April 9, 2021

துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த புதிய உத்தரவை பிறப்பித்தார் ஜோ பைடைன்!

 

அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நிர்வாக உத்தரவுகளை அதிபர் ஜோ பைடைன் பிறப்பித்துள்ளார்.

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு பகுதிகிளில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்திட வலியுறுத்தி சமூக ஆர்வலர்கள் அரசுக்கு நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், அந்நாட்டு அதிபர் ஜோபைடன், துப்பாக்கிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக பல்வேறு நிர்வாக உத்தரவுகளைப் பிறப்பித்தார். இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், 30 நாட்களுக்குள் துப்பாக்கிகளின் எண்ணிக்கையை குறைக்க ஒரு விதியை உருவாக்க நீதித்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சைக்கிளை மட்டுமே குறிவைத்து திருடிய நபர். 40 சைக்கிள்கள் பறிமுதல்! சென்னையில் 40 சைக்கிள்களை திருடிய குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு சைக்கிள்கள் சமீபகாலமாக திருடு போயுள்ளன. இது சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சிசிடிவி கேமராக்களை வைத்து சோதனை செய்ததில் திருநீர்மலையைச் சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 40 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தனை சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது

 

சென்னையில் 40 சைக்கிள்களை திருடிய குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குரோம்பேட்டை, தாம்பரம், பல்லாவரம் ஆகிய பகுதிகளில் அதிக அளவு சைக்கிள்கள் சமீபகாலமாக திருடு போயுள்ளன. இது சம்மந்தமாக அளிக்கப்பட்ட புகாரை அடுத்து சிசிடிவி கேமராக்களை வைத்து சோதனை செய்ததில் திருநீர்மலையைச் சேர்ந்த குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து சுமார் 40 சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தனை சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டாலும், அதன் உரிமையாளர்களைக் கண்டுபிடிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக சொல்லப்படுகிறது