Saturday, March 10, 2012

சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!


சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்!

நேற்றுமுதல் சூரியனின் மேற்பரப்பில் கடும்புயல் வீசுவதால் பூமிக்கு ஆபத்து ஏற்படலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். சூரியனின் மேல்மட்டத்தில் உருவான புயல் பூமியின் காந்த களத்தை தாக்கியுள்ளது. இதனால் அடுத்த24 மணிநேரத்திற்குள் விமானப் போக்குவரத்து, செயற்கைக்கோள் செயல்பாடுகள், தகவல் தொடர்புகள் பாதிக்கப்படலாம் என நாசா அறிவியல் ஆராய்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஐந்தாண்டுகளில் இல்லாத வகையில் சூரியனின் மேற்புறம் சமீப காலமாக கடும் சீற்றத்துடன் உள்ளது. இதனால் மின்காந்தத் தூண்டல் கதிர் வீச்சு, உயரழுத்த புரோட்டான்களின் அதிர்வலையால் ஏற்படும் கதிர்வீச்சு, சூரியனின் கரோனா என்னும் மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சு என அடுத்தடுத்து மூன்று வகையான பாதிப்புகள் பூமியை நோக்கி வரும் என்று தெரிகிறது.

தற்போது பூமியை தாக்கியுள்ள சூரியப் புயல் இதுவரை ஏற்பட்டதிலேயே மிகப் பெரியது என தெரிய வருகின்றது என அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சூரியப் புயலால் பூமியின் வடதுருவம் அதிகளவில் பாதிக்கப்படக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

Read more about சூரியனில் வீசும் கடும் புயலால் பூமிக்குப் பாதிப்பு - பீதியில் விஞ்ஞானிகள்! 

நன்றி : www.inneram.com

No comments:

Post a Comment