சவூதி அரேபியா: அறுவை சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு மூன்று இலட்சம் ரியால்கள் அபராதம் விதித்து சவூதி ஷரியா சுகாதார ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் அம்மருத்துவரின் கவனக்குறைவாலும், தவறாலும் நோயாளி மரணம் தழுவியதாக நோயாளியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியிருந்தனர். சவூதி கிழக்கு மாகாணத்தின் சுகாதாரத் துறை பொது மேலாண் இயக்குநர் டாக்டர் தாரிக் அப்துர்ரஹ்மான் அல் சாலிம் இக்குற்றச்சாட்டை ஆராயும் படி ஷரியா மருத்துவ ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
ஷரியா மருத்துவ ஆணையத்தில் பல்நிலை மருத்துவ நிபுணர்களும் உறுப்பினராக உள்ளதால், அவர்கள் இவ்வழக்கை முழுமையாக ஆய்வு செய்து மருத்துவரின் பிழையை உறுதிபடுத்தினர்.நோயாளியின் கல்லீரலில் காணப்பட்ட கொழுப்புப்பை ஒன்றை நீக்க நேர்கையில் கவனக்குறைவால் இப்பிழை ஏற்பட்டது என்றுதெரிகிறது.
நன்றி : www.inneram.com

No comments:
Post a Comment