திமுக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மத்திய ரயில்வே துறை அமைச்சர் தினேஷ் திரிவேதியை நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசியபோது தமிழகத்தில் ரயில்வே கட்டமைப்பு மேம்படுத்தக் கோரும் கோரிக்கை மனுவை அளித்தார், அதில், தமிழகத்தில் நிலுவையில் உள்ள ரயில்வே திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்குதல், புதிய ரயில் சேவைகள் மற்றும் புதிய திட்டங்களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் இடம் பெற்றிருந்தன.
மனுவை பெற்றுக் கொண்ட மத்திய ரயில்வே அமைச்சர் உரிய நடவடிக்கை எடுத்து ஆவன செய்வதாக உறுதியளித்தார். அப்போது அமைச்சரிடம் டி.ஆர்.பாலு தமிழகத்திலுள்ள ரயில்வே திட்டங்களுக்கு வரும் நிதியாண்டில் 900 கோடி ஒதுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். சென்னை ராயபுரத்தில் 4 ஆம் ரயில் முனையம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வர இருக்கும் ரயில்வே பட்ஜெட்டில் இடம் பெறச் செய்ய வேண்டும் என்றும் டி.ஆர்.பாலு வற்புறுத்தினார்.
மேலும்,சென்னை தாம்பரத்தில் ரயில்வே முனையம் அமைப்பது,சென்னையில் 2 ஆவது ரயில் பெட்டி தொழிற்சாலை அமைத்தல் உள்ளிட்ட 7 புதிய ரெயில் தடங்களை கொண்டு வருதல், ஆவடி-ஸ்ரீபெரும்புதூர்-கூடுவாஞ்சேரி,அரியலூர்-தஞ்சாவூர்-பட்டுக் கோட்டை, திண்டுக்கல்-கம்பம்-குமுளி-எரிமேலி ஆகிய புதிய ரெயில் பாதை திட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
No comments:
Post a Comment